No results found

    பாதுகாப்பற்ற வீட்டுப்பொருட்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்


    அன்றாட வாழ்வில் நாம் உபயோகிக்கும் வீட்டு பொருட்களால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம். எனவே பெற்றோர்களும், குழந்தை காப்பாளர்களும் இதனைப்பற்றி அறிவது அவசியம்.

    * குழந்தைகள் சமையலறையில் விளையாடுவதை முற்றிலும் தவிர்க்கவும். சூடான எண்ணெய், சூடான தண்ணீர், தீப்பட்டி போன்ற பொருட்களை கையாளுவதால் தீக்காயம் ஏற்படலாம். கூர்மையான கத்தி போன்ற பொருட்களை கையாளுவதால் காயம் ஏற்படலாம். 

    * மிக்ஸி, அயர்ன்பாக்ஸ், சுவிட்ச்போர்டு போன்ற பொருட்களை கையாளுவதால் காயம் ஏற்படலாம். போன்ற கருவிகளை பெற்றோர்கள் உபயோகிக்கும் போது கவனமாக இருக்கவும்.

    * மண்எண்ணெய், பெட்ரோல், பூச்சிக்கொல்லி போன்ற ஆபத்தான திரவியங்களை கை எட்டும் தூரத்திலோ, அல்லது குளிர்பானம் அருந்திவிட்டு காலியான பாட்டில்களிலோ ஊற்றி வைப்பதை அறவே தவிர்க்க வேண்டும். இதனை குழந்தைகள் அறியாமல் குடிப்பதனால் பாதிப்பு ஏற்படலாம். 

    * நாணயங்கள், ஊசிவகைகள், பேட்டரி, ஆணி, ரசகற்பூரம், கண்ணாடி, போன்ற சிறிய அளவிலான பொருட்கள் மற்றும் குழந்தைகளின் உள்ளங்கை அளவில் அடங்கும் பொருட்களை கையாளக் கூடாது. இப்பொருட்களை விழுங்குவதால் தொண்டை மற்றும் குடல் பகுதியில் பாதிப்பு ஏற்படலாம். 

    * கற்பூரம் மற்றும் கற்பூர எண்ணெய்யை தற்செயலாக உட்கொண்டால் வலிப்பு ஏற்படலாம். 

    * வீட்டில் உபயோகிக்கும் அனைத்து மருந்துகளும் குழந்தைகளின் கைக்கெட்டும் தூரத்தில் வைக்ககூடாது. தற்செயலாக உட்கொண்டால் பாதிப்பு ஏற்படலாம். 

    * செல்போன் (கைபேசி) தொலைக்காட்சி, மடிக்கணினி அளவோடு உபயோகிக்க வேண்டும். செல்போன் அதிகமாக உபயோகிப்பதால் குழந்தைகளின் வளர்ச்சி மைல்கல்லில் பாதிப்பு ஏற்படலாம். மேற்கண்ட வழிமுறைகளை பெற்றோர்கள் கவனத்தில் கொண்டு குழந்தைகளை பாதுகாப்பாக பராமரித்தால், அவற்றின் மூலம் வரும் விளைவுகளை முற்றிலும் தடுக்க முடியும்.

    Previous Next

    نموذج الاتصال